ராஜாதி ராஜன் ஏசு வானம் ஏறி வருவார் தாகம் கொண்ட எவரும் தந்தை கூட வாழ்வார் உணர்ந்திடு உறங்காதே - இயேசு வருகின்றார் உறங்காதே. காலத்தின் சம்பவங்கள் எல்லாம் இயேசு வரும்போது தெறித்தோடிடும் காத்திரு என் மனமே - இயேசு காந்தம் போலே வருவார் உணர்ந்திடு உறங்காதே - இயேசு வருகின்றார் உறங்காதே. வார்த்தைகள் தந்த நாதன் வாக்கு மாறாதவர் என்றும் வாசல் தேடி வருவார் வானம் மீது வருவார் உணர்ந்திடு உறங்காதே - இயேசு வருகின்றார் உறங்காதே. கானாவூர் கல்யாணம் போல அதிசயம் நிகழ்த்திட வருவார் கலங்கிடாதே நீ மனமே காவல் தெய்வமாய் வருவார் உணர்ந்திடு உறங்காதே - இயேசு வருகின்றார் உறங்காதே.